தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் லண்டன் புறப்பட்டது பற்றி....

News image

சென்னை விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலின் - X | DMK

Updated On :4 ஜூலை 2026, 12:47 pm IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட மு.க. ஸ்டாலினை, திமுக முன்னாள், அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

மு.க. ஸ்டாலினின் பேரனும் உதயநிதியின் மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அனைவரும் லண்டன் செல்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்பநிதி உயர்கல்வி பயின்று வருகிறார். அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் அங்கேயே சில நாள்கள் தங்கியிருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 20க்கு பின்னரே அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தனது பயணத்திற்கு முன்னதாக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வரும் என்றும் இரண்டு வாரங்கள் வெளிநாடு சென்றாலும், எனது மனம் எப்போதும் அறிவாலயத்திலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Summary

M.K. Stalin left for London with his family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.