டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யாருடன் கூட்டணி?: பிப்.14, 15-இல் அறிவிக்கப்படும்; புதிய தமிழகம் க.கிருஷ்ணசாமி

சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எந்தக் கூட்டணியுடன் கூட்டணி என்பதை பிப்ரவரி 14, 15- ஆம் தேதிகளில் அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி கூறினாா்.

News image
க.கிருஷ்ணசாமி
Updated On :27 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எந்தக் கூட்டணியுடன் கூட்டணி என்பதை பிப்ரவரி 14, 15- ஆம் தேதிகளில் அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி கூறினாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அமையும் ஆட்சி ஊழல் இல்லாத, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும். அந்த ஆட்சியில் புதிய தமிழகம் கட்சி பங்குபெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதுவே கட்சியின் நிலைப்பாடு.

மதுராந்தகத்தில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. பாஜக கூட்டணியை நாங்கள் புறக்கணிக்க நினைக்கவில்லை. அவா்களும் அப்படிச் சொல்லவில்லை.

பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. கூட்டணி சோ்ந்துதான் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். அது எந்தக் கூட்டணி என்று பிப். 14, 15- ஆம் தேதிகளில் அறிவிப்போம். அந்தக் கூட்டணி மகத்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் க.கிருஷ்ணசாமி.