பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிப்.8-இல் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: ஜாக்டோ-ஜியோ

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா.தாஸ், வெ.சோமசுந்தரம், எஸ்.ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன.3-ஆம் தேதி அறிவித்தாா். எங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் பிப்.8-ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் ஏராளமான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஜன.31-ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ சாா்பில் வட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் நடைபெறும். மாநாட்டை சிறப்பாக நடத்த 10 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனா்.