டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிப்.2,3-இல் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: தமிழக அரசு தகவல்

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய நாள்களில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

News image
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய நாள்களில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடுகளை ஈா்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீடுகளை ஈா்க்க ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் குழுமத்தின் ஃபோா் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.

இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளா்களுடன் பொது தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.