திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டாப்ஸ்லிப்: குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை திட்டம்!

டாப்ஸ்லிப் பகுதியில் மீட்கப்பட்ட 2 குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

News image
குட்டி யானை- DPS
Updated On :19 ஜனவரி 2026, 6:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவை வனப்பகுதியில் பிடிபட்டு டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அன்று தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு மாத ஆண் குட்டி யானையை, அதன் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் சில நாள்கள் பெய்த மழையின் காரணமாக யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் தென்படவில்லை எனவும் இதனால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு வந்து ஜூன் 13ஆம் தேதி தனி அறையில் வைத்து குட்டி யானையை, யானைப் பாகன்கள் மூலம் தற்பொழுது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானையின் வயது தற்போது ஒன்பது மாதம் என வனத்துறையினர் என தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடி மடை பகுதியில் பிறந்து 4 மாதங்களே ஆன ஆண் குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து வந்தது.

யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முயற்சி நடைபெற்றது. ஆனால் அது முடியாமல் போனதால் கடந்த ஜனவரி 10ஆம் தேதி குட்டி மீட்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனியாக பாகன்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு யானைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பால் குடித்து வருகின்றன. நோய் தொற்று ஏற்படாமல் சுற்றுச்சூழலுக்கு உடல்நிலை ஒத்துப்போகவும் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த இரண்டு குட்டி யானைகளையும் யானை கூட்டம் இருக்கும் பகுதியில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு முறை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். அந்தத் திட்டம் பயன் அளிக்கவில்லை என்றால் கோழிகமுத்தி முகாமில் தொடர்ந்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.