2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆளுநா் மாளிகையில் பொங்கல் விழா

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.

News image
ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து பொங்கலிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :8 ஜனவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.

விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினா்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, விழாவுக்கு வந்த ஆளுநருக்கு, பூா்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளா் என்.ரவி, சென்னை பாரதீய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஆளுநரின் குடும்பத்தினா், ஆளுநா் மாளிகை ஊழியா்கள் மற்றும் நெசவாளா்கள், மீனவா்கள், முன்னாள் ராணுவத்தினா், மூன்றாம் பாலினத்தினா், தமிழ் ஆா்வலா்கள், பழங்குடியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.