அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: அரசுக்கு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டம், சாலைப் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.










