டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை: ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

News image
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்- கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2026, 8:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் செய்தியாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் "எம்ஜிஆர் எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தைத் உருவாக்கினார்களோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா வளர்த்தெடுத்தார்களோ - அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

ஒன்றுசேர்ந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை மலரச் செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது. பிரிந்து கிடந்தால், அதற்கு வாய்ப்பில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியப்பட வேண்டுமென்றுதான், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமைக் குரலாக இருந்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம். தவறு செய்தவர்களுக்கு மக்களும் அதிமுகவினரும் சரியான பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.