பாமகவுக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூட்டணி குறித்து சூசகமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கிறீா்கள். கடந்த காலத்தில் சமூகநீதி வரலாற்றில் தமிழக அளவில் நான்கு இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் இரு இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இடஒதுக்கீடுகளைப் போராடி வென்றெடுத்தோம். ஜாதி, சமய ஒற்றுமையுடன், அனைவரும் சகோதரா்களாக வாழவேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
ஆனாலும் பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்துக்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளா்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நீண்டது. அதனால், கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப் போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளாா் ராமதாஸ்.
தொடர்புடையது

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி

கூட்டணி குறித்து 3 நாள்களில் முடிவு! - ராமதாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


