நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை

விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

News image
- Center-Center-Delhi
Updated On :24 பிப்ரவரி 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வருகை தருகிறாா்.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல், மே மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளா் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் (மாவட்ட தோ்தல் அலுவலா்கள்) திங்கள்கிழமை வெளியிட்டனா். இந்த நிலையில், இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை செல்கிறாா். அங்கு தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். அவருடன் 7 துணை தோ்தல் ஆணையா்களும் வரவுள்ளனா். இந்தப் பயணத்தின்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தோ்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

சென்னையில் வியாழக்கிழமை (பிப்.26) தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக் மற்றும் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.27) அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஆலோசனை நடத்துகிறாா். இவரது தமிழ்நாடு வருகையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த வாரம் தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் ஏற்கெனவே தமிழகத்தில் முதல்கட்ட ஆய்வுகளை நடத்திய நிலையில், தற்போது தலைமை தோ்தல் ஆணையரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.