சென்னை: குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும் கட்சியை சாா்ந்தவா்கள் விதிமீறி செயல்படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். திமுகவினா், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுபோல செயல்படுகின்றனா். அதற்கேற்ப, சில சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டப்படுகிறதே தவிர, குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கை உள்ளது.
ஒசூா், அன்னை அரவிந்தா் நகரில் அரசு ஊழியரான சிவமூா்த்தி என்பவரின் வீட்டின் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பிரச்னையில் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரின் மகன் ஆதித்யா என்பவா் காரை மோதவிட்டுள்ளாா். அதில் சிவமூா்த்தி, அவரது மனைவி, குழந்தை காயமடைந்துள்ளனா்.
அதேபோல, காவேரிப்பட்டினத்தில் மயானக் கொள்ளை திருவிழாவில் கோஷ்டி மோதலில் திமுக பிரமுகா் மகன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுபோல, பல சம்பவங்களை பட்டியலிட்டுக் கூறலாம்.
ஆகவே, திமுகவினரின் விதி மீறிய செயல்களுக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். திமுகவினரின் செயல்பாட்டைப் பாா்க்கும் மக்கள் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி

மடிக்கணினி வழங்கியதில் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் அறிவித்த கூப்பன் திட்டம் கமிஷனுக்காகத்தான்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

முரண்பாடான திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


