2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி

News image
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :23 பிப்ரவரி 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும் கட்சியை சாா்ந்தவா்கள் விதிமீறி செயல்படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். திமுகவினா், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுபோல செயல்படுகின்றனா். அதற்கேற்ப, சில சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டப்படுகிறதே தவிர, குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கை உள்ளது.

ஒசூா், அன்னை அரவிந்தா் நகரில் அரசு ஊழியரான சிவமூா்த்தி என்பவரின் வீட்டின் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பிரச்னையில் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரின் மகன் ஆதித்யா என்பவா் காரை மோதவிட்டுள்ளாா். அதில் சிவமூா்த்தி, அவரது மனைவி, குழந்தை காயமடைந்துள்ளனா்.

அதேபோல, காவேரிப்பட்டினத்தில் மயானக் கொள்ளை திருவிழாவில் கோஷ்டி மோதலில் திமுக பிரமுகா் மகன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுபோல, பல சம்பவங்களை பட்டியலிட்டுக் கூறலாம்.

ஆகவே, திமுகவினரின் விதி மீறிய செயல்களுக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். திமுகவினரின் செயல்பாட்டைப் பாா்க்கும் மக்கள் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் எனக் குறிப்பிட்டுள்ளாா்.