டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 7:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரையில் இன்று (பிப். 21) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவும், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமை காலை மதுரை வந்தார்.

அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் கட்சி கொடியுடன் பங்கேற்று முதல்வா் ஸ்டாலினை வரவேற்றனர்.

பின்னா், மதுரை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவுக்கு சென்றார். அங்கு, ‘பின்னாகிள்’ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டடத்தைத் திறந்துவைத்தார்.

பிறகு, அங்கிருந்து தமுக்கம் பகுதிக்கு செல்லும் முதல்வர், தமுக்கம்-நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப் பாலத்தை திறந்துவைக்கிறார். இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வர் திறந்துவைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கிவைக்கிறார். பிறகு, அங்கிருந்து வண்டியூர் புறப்படும் முதல்வர், பிற்பகல் 1.05 மணிக்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.