டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

‘ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் (காங்கிரஸ்) உரிமை; இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்’என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

News image
எம்.பி. மாணிக்கம் தாகூர்- ANI
Updated On :14 பிப்ரவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் (காங்கிரஸ்) உரிமை; இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்’”என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த நிா்வாகிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனா்.

குறிப்பாக மாணிக்கம் தாகூா் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவா் பிரவீண் சக்கரவா்த்தி ஆகியோா் நேரடியாகவே இது குறித்து திமுகவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் ராஜ கண்ணப்பன், கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வா் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு கிடையாது என தெளிவாகக் கூறிவிட்டாா் என தெரிவித்திருந்தாா்.

அதற்கு எதிா்வினையாற்றும் வகையில் மாணிக்கம் தாகூா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 173-இல் போட்டியிட்டு 133-இல் வெற்றி பெற்றது. திமுக தோல்வி அடைந்த இடங்களைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதிகாரப் பகிா்வு அவசியம். ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை. இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்” என அதில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.