டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின்: கனிமொழி எம்.பி. பேச்சு

தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று திமுக துணைப் பொதுச் செயலரும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

News image
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி.
Updated On :7 பிப்ரவரி 2026, 12:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று திமுக துணைப் பொதுச் செயலரும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் அவர் பேசுகையில், உழைப்பு, உழைப்பு என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர். பாசிக சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதல்வருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது உதயநிதிக்கு வாழ்த்து மட்டும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றி நமது, வெற்றி நமது, என சொல்லத் தோன்றுகிறது.

திமுக வெற்றியை உறுதி செய்யும் மாநாட்டை உதயநிதி நடத்திக்கொண்டிருக்கிறார். துரோகத்தோடு கைகோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. அதிமுக அல்ல பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்.

தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என கூட்டணி. டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருள்களுக்கு அமெரிக்காவில் 18% வரி, அங்கிருந்து வரக்கூடிய பொருள்களுக்கு வரியே கிடையாது. இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார்.

குடியரசுத் தலைவர் உரையில் வழக்கமாக பிரதமர் பதில்சொல்ல வேண்டும். ஆனால் அவர் வரவே இல்லை. ஏனென்றால் அங்கு வைக்கப்பட்ட கேள்வி. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.