டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட்!

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
கிஷண் ரெட்டி- கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோனாசைட் என்பது சிவப்பு-பழுப்பு நிற பாஸ்ஃபேட் கனிமமாகும். இது கனிம வளம் அதிகம் நிறைந்துள்ள கடலோர மணல் பரப்புகள், அனல் பாறைகளில் இருந்து முதன்மையாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்ததாவது: அணுசக்தி துறையின் கீழ், அணு கனிமங்கள் தேடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (ஏஎம்டி) செயல்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களின் கடலோர மணலில் 1.31 கோடி டன் மோனாசைட் இருப்பதாக ஏஎம்டி மதிப்பிட்டுள்ளது என்றாா்.

இதேபோல அந்த அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே அளித்த பதிலில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு நீதி ஆயோக் பரிந்துரையைத் தொடா்ந்து, 136 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலங்கள் மூலமாகத்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.