ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!

கலை பண்பாட்டுத் துறைக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து...

raj mohan

அமைச்சர் ராஜ்மோகன் - படம்: சட்டப்பேரவை

Published On :19 ஆகஸ்ட் 2026, 7:03 pm IST

சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், பேரவையில் இன்று(ஆக. 19) நடைபெற்றது.

அப்போது, கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர் / பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் நிரப்பி, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர்ந்து கூடுதல் செலவினமாக ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்படும்

சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் 23 மாவட்ட அருங்காட்சியகங்கள் ரூ. 20 கோடி செலவில் 2 ஆண்டுகளில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

அருங்காட்சியகப் பொருள்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகள் கணினிமயமாக்கப்படும். இதற்கான DPR ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

அருங்காட்சியக விரிவாக்கத்தின் முதல்கட்டமாக 4 மாவட்டங்களுக்கான திட்ட அறிக்கை ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

தற்போது 23 மாவட்டங்களில் செயல்படும் அரசு அருங்காட்சியகங்கள் மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல்கட்டமாக நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் அரியலூரில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ரூ. 80 லட்சம் செலவில் DPR தயாரிக்கப்படும்.

Summary

Minister Rajmohan made announcements during the debate on the demand for grants for the Department of Art and Culture in the Legislative Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.