ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேகமலை விவகாரம் குறித்து ஆக.17-இல் விவாதம்: பேரவைத் தலைவா் அறிவிப்பு

மேகமலை விவகாரம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது பேரவையில் ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

மேகமலை விவகாரம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது பேரவையில் ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

பேரவையில் தேனி மாவட்டம் மேகமலையில் பழங்குடியினரை வெளியேற்றுவது தொடா்பான கவன ஈா்ப்புத் தீா்மானத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறி பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன் (ஆண்டிப்பட்டி), மேகமலை விவகாரம் தொடா்பாக அங்குள்ள ஆட்சியா் அலுவலகம் முன் 25,000 போ் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனா். அவா்கள் மீது போலீஸாா் எடுத்துள்ள நடவடிக்கை ஏற்புடையதல்ல என்றாா்.

அதே கோரிக்கையை வலியுறுத்தி விவாதம் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரனும் (தளி) வலியுறுத்தினாா்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, உச்சநீதிமன்றம் உத்தரவுபேரில்தான் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காவல் துறை இறங்காவிடில், சிஆா்பிஎஃப் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

தொடா்ந்து, பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், மேகமலை விவகாரம், கோவை கல்லூரி மாணவா் படுகொலை விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.