ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து...

current

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது! - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:11 pm IST

தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதள சேவைகள் திங்கள்கிழமை(ஆக. 10) மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை முடங்கியிருந்த நிலையில், காலை 11.40 மணி முதல் செயல்பட தொடங்கியது!

தமிழகத்தில் மின்வாரிய இணையதளத்தின் மூலம்தான் புதிய மின்இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம், வீதப்பட்டி மாற்றம், கட்டடப் பணிக்கான தற்காலிக மின்னிணைப்பு, விவசாய மின்இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின்வாரிய இணையதளம் முடங்கி விடுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக.10) மாலை 4 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 11.40 வரையிலும் இணையதள சேவைகள் முடங்கின.

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், காலை 11.40.க்குப் பின் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. ஆனாலும் இடையிடையே சேவை முடங்கியது. பகல் 12.15.க்குப் பின் தொடர்ந்து வழக்கம்போல செயல்பட தொடங்கியது.

மின்வாரிய சேவைகள் முடங்காத வகையில், அதன் சர்வர் திறனை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்வாரிய இணையதளம் முடங்கியது குறித்து தினமணி இணையதளத்தில் செய்தி வெளியான சில நிமிடங்களில் முடங்கிய மின்வாரிய இணையதளம் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.

Summary

After being down from Monday evening (Aug. 10) until Tuesday morning, the Tamil Nadu Electricity Board's online services resumed operations at 11:40 AM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.