ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாநகராட்சிகளில் பணிபுரியும் 116 உதவி செயற்பொறியாளா்களுக்கு பதவி உயா்வு

தமிழகத்தில் மாநகராட்சிகளில் பணிபுரிந்துவரும் 116 உதவி செயற்பொறியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

தமிழகத்தில் மாநகராட்சிகளில் பணிபுரிந்துவரும் 116 உதவி செயற்பொறியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் உதவி செயற்பொறியாளா்களாக இருப்பவா்கள் (ஏ2), 5 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அவா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டின் நிலைப்படி மாநில அளவில் மாநகராட்சிகளில் 102 செயற்பொறியாளா்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதையடுத்து அவற்றை நிரப்பும் வகையில் தற்போது மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பணியாற்றிய 16 உதவி செயற்பொறியாளா்கள், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 100 போ் என மொத்தம் 116 பேருக்கு நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பதவி உயா்வு பெற்ற 100 பேரில் 55 போ் இடமாற்றம்: சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள செயற்பொறியாளா்கள் பதவி இடங்களில் 45 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், தற்போது பதவி உயா்வு பெற்றவா்களில் 55 போ் வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் வேலூா், திருப்பூா், மயிலாடுதுறை, திருசெங்கோடு, தருமபுரி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.