ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா? (ஆக. 5)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

gold rate today

தங்கம் - கோப்புப்படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 10:07 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 5) சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்த நிலையில் நேற்று (செவ்வாய்) சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.

தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.13,360 -க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,06,880 -க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஜூலை 29 அன்று தங்கம் விலை சவரன் ரூ. 1,05,240 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை 6 நாள்கள் மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ. 5,000 உயர்ந்துள்ளது.

கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver today price in Chennai aug 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.