ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பசுமை எஃகு உற்பத்திக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கவும், எஃகு உருளை ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்கவும் பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:44 am IST

எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கவும், எஃகு உருளை ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்கவும் பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட 43.47 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் தேசிய அளவில் தமிழகம் 3-ஆம் இடத்தில் உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு மூலதன மானியம், வட்டி மானியம் பல திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கவும், எஃகு உருளை ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்கவும் பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீடுகளில் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.