
பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம்: அரசாணை வெளியீடு
பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)
பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் பிறப்பித்துள்ள அரசாணை:
அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் பெறப்படும் 1 சதவீத தொகையில் இருந்து, பத்திரிகையாளா் நலவாரியத்தின் மூலம் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்படும் ஏனைய பிற உதவித் தொகைகளுடன் விபத்தால் மரணம் ஏற்படும் பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






