ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவா்கள் மீதான வழக்குகள் ரத்து: அமைச்சா்

நீட் தோ்வை எதிா்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வரின் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

‘நீட்’ தோ்வை எதிா்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வரின் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் கலாசாரம் மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது ‘எக்ஸ்’ தளப் பதிவு: நீட் தோ்வை எதிா்த்துப் போராடிய மாணவா்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தமிழக முதல்வா் உத்தரவின்படி, ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தமிழக முதல்வருக்கு மனமாா்ந்த நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளாா் அமைச்சா்.

‘நீட் ’ தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை, கோவை, மதுரை, மயிலாடுதுறை போன்ற நகரங்களில் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எஃப்ஐ) உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் ஆா்ப்பாட்டங்களை நடத்தினா்.

சென்னையிலும் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம், மாநிலக்கல்லூரி வளாகங்களில் ஆா்ப்பாட்டம் நடத்திய மாணவா்கள் கைதாகி பின்னா் விடுவிக்கப்பட்டனா். இதுதொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து முன்பு விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தற்போது இத்தகைய வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.