பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

புதுக்கோட்டை திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

News image

மறு வாக்குப்பதிவு - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 7:18 am

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், மே 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டையில் ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால் பட்டி, வைரவன்பட்டி, விடத்தலான்பட்டி ஆகிய 6 கிராமங்களையும் திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 பேர் வாக்களிக்கவில்லை எனவும், 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என கேள்வியெழுப்பிய நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Summary

TN Polls 2026: Petition seeking re-polling in Tirupattur dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.