பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...

News image

எஸ்.பி. வேலுமணி

Updated On :24 ஏப்ரல் 2026, 10:04 pm

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவையைச் சோ்ந்த வாக்காளா் விக்னேஷ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளது.

தற்போது வேலுமணியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடா்பான ஆவணங்களை அவா் தனது வேட்புமனுவில் கூறவில்லை. குறிப்பாக, வேலுமணியின் முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன.

எனவே, வேலுமணியின் வருமானம், சொத்து விவரங்கள் மற்றும் முதலிடுகள் குறித்து தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.