தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:45 pm

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாணவா்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்ட ஆசிரியா்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவா் பணிபுரிந்த பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகாளை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.