மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

தொகுதி மறுவரையறைக் குழு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு

News image

ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 11:23 am

பாஜகவுக்கு தொகுதி மறுவரையறைக் குழு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பாதிக்கும். சிறந்த ஆட்சி வழங்கப்படும்போதிலும், இத்தகைய அணுகுமுறையால் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தி, கூட்டாட்சி முறையின் உணர்வைக் குலைக்கக் கூடும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், ஒருதலைபட்சமாகவோ அரசியல் உள்நோக்கத்துடனோ எடுக்கப்படக்கூடாது. மேலும், நடவடிக்கைகளுக்கு முன்னதாக மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல; அது நீதி, பங்களிப்பு, சமநிலையைப் பற்றியது.

பாகுபாடு காட்டப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமிழகம் மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாநில மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் கிளம்பும்.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின்கீழ் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படுவது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.

Summary

Delimitation Committee to be formed under a Supreme Court judge and the Chief Election Commissioner, who favour the BJP, is unfair, says Congress MP Jothimani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.