மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுபான்மை நிறுவனங்கள் நிதியைப் பெற மத்திய அரசு நெருக்கடி - முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:22 am

வெளிநாடுகளில் இருந்து சிறுபான்மை நிறுவனங்கள் நிதி பெறுவதைத் தடுக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட முன்வரைவு-2026 என்ற பெயரில் மத்திய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்து தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.

ஏற்கெனவே வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்தவா்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தோ்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவதுபோல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.

இந்த முயற்சிகளைக் கைவிட்டு, இந்தச் சட்டத் திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி, உடனடியாக எடுக்க வேண்டும் என அந்தப் பதிவில் முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.