சென்னை: மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைகளை, அந்த மாநில ஆளுநர், தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை, அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
சிறையில் நீண்ட காலம் உள்ள கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு அளிக்கும் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடா்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணாமலை பல்கலை. மாணவா் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை ஆளுநா் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் எஸ்தா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமா்வு, முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்தது தவறு. அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து ஆளுநா் அந்த பரிந்துரையை மீண்டும் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநா் நிராகரித்த உத்தரவை எதிா்த்து மேலும் பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்தனர்.
மேலும், இந்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வுக்கு பரிந்துரைத்த நீதிபதிகள், அப்போது ஜான் டேவிட் உள்ளிட்டோரை இடைக்கால பிணையில் விடுவித்தனா். இந்தநிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, ஆளுநர் என்பவர், அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின்படியே செயல்படமுடியும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருக்கிறது என்று மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் வாதிட்டிருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று பிறப்பித்த தீர்ப்பில், கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை தன்னிச்சையாக நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
Summary
The Madras High Court has ruled that the Governor cannot arbitrarily reject the recommendations of a state cabinet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத நம்பிக்கை விவகாரங்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் வாரியம் வாதம்

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயா்நீதிமன்றம் தீா்ப்பு

முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆளுநரின் அதிகாரம் குறித்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



