மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேறியிருக்கும் விஜய்...

News image
தவெக தலைவர் விஜய்- கோப்புப் படம்
Updated On :29 செப்டம்பர் 2025, 5:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்து அன்றிரவு கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கலை பதிவிட்டிருந்தார்.

தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல், சென்னை வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்ட நிலையில், அவர் கரூர் செல்வதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.

தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் செல்வதற்கு அனுமதியும் பாதுகாப்பும் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

summary

Tvk leader Vijay has left from Neelankarai and gone to his Pattinambakkam house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.