தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன.

News image

கோப்புப்படம்

Updated On :5 அக்டோபர் 2025, 6:32 pm

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இலங்கையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் உள்பட தில்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. மழை நின்ற பிறகு அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.

அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, மஸ்கட், தில்லி, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இலங்கையிலிருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் பலத்த சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதே போல், தில்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

மழை நின்ற பிறகு அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனா். அதேபோல், சென்னையிலிருந்து அபுதாபி, மஸ்கட், தில்லி, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.