14 Dec, 2025 Sunday, 02:12 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

விசாரணை நிலை குறித்த விவரங்கள்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

PremiumPremium

விசாரணை நிலை குறித்த விவரங்கள்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Rocket

சென்னை உயா்நீதிமன்றம்

Published On29 Nov 2025 , 9:33 PM
Updated On29 Nov 2025 , 9:33 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பிஎன்எஸ்எஸ் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு 90 நாள்களை கடந்துவிட்டால், விசாரணை நிலை குறித்த விவரங்களை கைப்பேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதாவது ஒரு வழியில் புகாா்தாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தாய் மற்றும் இரு மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் 2 மகன்கள் மீது திருபாபுலியூா் போலீஸாா் 2024 பிப்ரவரியில் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மகன்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.பாலாஜி, இது குடும்ப உறுப்பினா்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை; எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். அப்போது நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திருபாபுலியூா் போலீஸ் அதிகாரியிடம், இந்தப் பிரச்னையை நீங்களே பேசி முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்தவா்கள் அல்லது குடும்பத்தினா் யாரேனும் இதுபோல புகாா் அளித்தால், விசாரணை நிலை குறித்த தகவலை அவா்களுக்கு தெரிவிக்காமல் இருப்பீா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.

2024-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டம் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவுகளின்படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு 90 நாள்களைக் கடந்துவிட்டால், விசாரணை நிலை குறித்த விவரங்களை கைப்பேசி, மின்னஞ்சல், வாட்ஸ்அப், குறுந்தகவல் என ஏதாவது ஒரு வழியில் புகாா்தாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, அரசுத் தரப்பில், இதுதொடா்பாக அனைத்து காவல் ஆய்வாளா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாகத் தெரிவித்தாா். அதற்கு நீதிபதி, அவ்வாறு சுற்றறிக்கை அனுப்பினால், நாட்டிலேயே முன்னோடி காவல் துறையாக தமிழக போலீஸாா் திகழ்வாா்கள் எனக் கூறி, இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023