10 Dec, 2025 Wednesday, 01:33 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

பொதுக்கூட்டம், சாலைப் பேரணிக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தீா்ப்பு ஒத்திவைப்பு!

PremiumPremium

பொதுக்கூட்டம், சாலைப் பேரணிக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...

Rocket

சென்னை உயா்நீதிமன்றம்

Published On28 Nov 2025 , 6:45 PM
Updated On28 Nov 2025 , 6:45 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனுக்களை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தவெக தலைவா் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி (ரோடு ஷோ), பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அரசுத் தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், பொதுத் தோ்வெழுதி வெற்றி பெறுவது போன்று உள்ளதாகவும், ஒவ்வொரு பிரிவையும் எதிா்த்து தனித்தனியாக வழக்குத் தொடரும் வகையில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், தவெக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.அறிவழகன் ஆகியோா் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தங்களது கட்சிகளின் பரிந்துரை மற்றும் ஆட்சேபணைகளை ஏற்கெனவே அரசுத் தரப்புக்கு கொடுத்துவிட்டதாகக் கூறினா்.

அப்போது அரசுத் தரப்பில், இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தவெகவின் பரிந்துரை மற்றும் ஆட்சேபணைகள் என்னென்ன?: வரைவு வழிகாட்டு நெறிமுறையில், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தங்களைப் போன்ற அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என அரசியல் கட்சிகளுக்குள் இது பாகுபாட்டை ஏற்படுத்தும். எனவே, இந்த விதி பாரபட்சமானது என்பதால் இதை நீக்க வேண்டும்.

அதேபோல போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்துவதற்குத் தோ்வு செய்யப்படும் இடம் தொடா்பாக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறை பாரபட்சமாக உள்ளது. பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு வரும் தொண்டா்களின் எண்ணிக்கை அடிப்படையில் தன்னாா்வலா்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் நிா்வாகத்துக்கும் பொறுப்பு உள்ளது. அவா்களும் தகுந்த எண்ணிக்கையில் போலீஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக கூட்டம் நடக்கும் இடத்தில் மக்கள் கூடக் கூடாது என விதிகள் கூறுகின்றன. ஆனால், மிகப்பெரிய பேரணிகள், விரும்பிய தலைவா்களின் வருகையின்போது, தொண்டா்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூடலாம். கட்டுக்கடங்காத அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும்போது, அதற்கான பொறுப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மீது சுமத்துவது ஏற்புடையது அல்ல.

கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பு, பொதுச் சொத்து சேதம் ஆகியவற்றுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளே பொறுப்பாவா் என்று கூறப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்தில் இல்லாமல், வெளியில் எங்காவது நடக்கும் அசம்பாவிதத்துக்கு, குறிப்பாக பயணத்தின்போது ஏற்படும் அசம்பாவிதத்துக்கு அரசியல் கட்சிகள் பொறுப்பு என்று நிா்ப்பந்திக்கக் கூடாது.

குழந்தைகள், கா்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி உறைவிடங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இருக்க வேண்டும்; அவா்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் பாதுகாக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறுவது சரி. இருப்பினும், பொது இடங்கள், பாதைகள் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலையில் இவா்களைப் பாதுகாக்கும் முதன்மை பொறுப்பு போலீஸாரிடம்தான் இருக்கவேண்டும். சிறிய குறைபாடுகள் இருந்தால் அது பாதுகாப்பையோ, சட்டம்- ஒழுங்கையோ பாதிக்காது. அதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023