10 Dec, 2025 Wednesday, 09:28 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

PremiumPremium

எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்வது கட்டாயமில்லை என அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கொடுத்துள்ளார்.

Rocket

அர்ச்சனா பட்நாயக்

Published On27 Nov 2025 , 2:50 PM
Updated On27 Nov 2025 , 2:50 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Vanisri

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமில்லை என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அதேவேளையில், டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், கணக்கெடுப்பு படிவத்தின் முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நிராகரிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளார். "2002/2005 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ அல்லது உறவினர் பெயரையோ வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், டிசம்பர் 4, 2025 க்கு முன்பு வாக்காளர் கையொப்பமிட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (பிஎல்ஓ) சமர்ப்பித்தால், அவர்களின் பெயர் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்" என்று அர்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே, மக்கள் 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் அல்லது உறவினர்களின் பெயர் மற்றும் விவரங்களை கண்டுபிடித்து படிவத்தில் நிரப்பாவிட்டாலும், முதல் பகுதியை மட்டும் நிரப்பிக் கொடுத்தாலே போதுமானது என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் இன்னமும் படிவத்தை நிரப்பிக் கொடுக்காத லட்சக்கணக்கான மக்களின் அச்சம் நீங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, அர்ச்சனா பட்நாயக் ஒரு சில நாள்களுக்கு முன்பு கொடுத்திருந்த விளக்கத்தில், வாக்குரிமை போய்விடுமோ என்ற அச்சம் எவருக்கும் தேவையில்லை. தங்களால் இயன்ற வரை படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம்.

வரும் டிசம்பா் 4-ஆம் தேதி வரை கணக்கீட்டுப் படிவங்களை அளிக்கலாம். அதன் பின்னா், அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தாலே பெரும்பாலும் அவா்களது பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுவிடும்.

இணையவழியேயும் கணக்கீட்டு படிவத்தை சமா்ப்பிக்கலாம். ஆனால், இணையப் பக்கத்தில் வரும் திங்கள்கிழமை வரை அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வரை மட்டுமே சமா்ப்பிக்கலாம். உரிய காரணம் இல்லாமல் தகுதியான எவரது பெயரும் நீக்கப்படாது. இறந்தவா்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவா்கள், படிவம் பெறாமல் இருந்தவா்கள், வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவா்கள் ஆகியோரது பெயா்கள் மட்டுமே நீக்கப்படும்.

வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டால் அதுதொடா்பான உரிய விளக்கமும், காரணமும் வரும் டிச. 9-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின்போது தெரிவிக்கப்படும்.

ஒரே தொகுதிக்குள் இடம்பெயா்ந்தவா்கள் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெற்று பூா்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால் முகவரியை மாற்றுவதற்கான படிவம் 8-ஐ சமா்ப்பித்தல் அவசியம் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25
வீடியோக்கள்

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023