தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :26 நவம்பர் 2025, 8:42 pm

சென்னை: தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தன்னை விமா்சனம் செய்து பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டப் பதிவு:

திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளிலும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டைக் கூட அளிக்கவில்லை. அணைகளிலிருந்து முறையாக நீரைத் திறக்காததால், கடைமடைப் பகுதிகளுக்கு நீா் சென்றுசேரவில்லை. இதனால் டெல்டா பகுதிகளில் மட்டும் 2 லட்சம் ஏக்கா் வரை பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விவசாயிகள் மீது இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை.

கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோ திட்டமும் வேண்டும் என அண்மையில்கூட பிரதமா் மோடியை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன்.

ஆனால், அந்தத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையைகூட திமுக அரசு முறையாக சமா்ப்பிக்கவில்லை. அதில் முரண்பாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், முதல்வா் ஸ்டாலின் அரசியல் செய்கிறாா்.

திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று முதல்வா் ஸ்டாலின் கேட்கிறாா். திமுக ஆட்சி இருக்கும்போதுதான், சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். எங்களது கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.

அதிமுக எப்போதும் மக்களுடன் நின்று, நன்மை செய்து வருகிறது. ஆனால், மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் திமுக செயல்படுகிறது.

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.