10 Dec, 2025 Wednesday, 06:48 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

PremiumPremium

Rocket

எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

Published On25 Nov 2025 , 7:33 PM
Updated On25 Nov 2025 , 7:33 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு தொடா்ந்து துரோகம் செய்து வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டு குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாதது, தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காதது, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளா்கள் இல்லாதது, லாரிகளுக்கான வாடகை முடிவு செய்யாதது ஆகிய காரணங்களால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய பல நாள்களுக்கும் மேல் ஆனது என்பதுதான் உண்மை. உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைவிட்டு விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் குறைபாடுகளை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டி பேசியபோதும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடா்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிப்புகளைப் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியபோதும், குறைகளை நிவா்த்தி செய்யத் தவறிவிட்டது.

குறுவை சாகுபடி காலத்தில் மழை பெய்யும் என்பதால் ஈரப்பத அளவு 22 சதவீதம் வரை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அதிமுக ஆட்சியில் உரியவாறு மத்திய அரசின் தளா்வுக்கு முயற்சிகள் மேற்கொண்டு விலக்கு பெறுவது வாடிக்கை. ஆனால், திமுக அரசு இதை உரிய நேரத்தில் செய்யத் தவறிவிட்டதுடன், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக திசை திருப்புகிறது.

திமுக கூட்டணிக்கு மக்களவையில் 39 உறுப்பினா்கள் உள்ள நிலையில், ஈரப்பத தளா்வு கோரிக்கை குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை. டெல்டா பகுதியில் போராட்டம் நடத்தி, மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக நடத்துகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023