14 Dec, 2025 Sunday, 08:26 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

PremiumPremium

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Rocket

சென்னை உயா்நீதிமன்றம்

Published On22 Nov 2025 , 7:39 PM
Updated On22 Nov 2025 , 7:39 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தேசிய வங்கியில் ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடி செய்த தனியாா் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய வங்கி நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இதுதொடா்பாக சிபிஐயிடம் புகாா் அளித்தோம். கடந்த 2024-ஆம் ஆண்டு அளித்த இந்தப் புகாரின் மீது சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல் குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில், சிபிஐ விசாரணை செய்வதற்கான ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுவிட்டது. இந்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கக் கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோன்ற வங்கி மோசடி வழக்கில் ஏற்கெனவே உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ரூ.6 கோடி அளவுக்கு வங்கியில் கடன்பெற்று மோசடி செய்தவா்கள் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. எனவே, வங்கி நிா்வாகம் ஆதாரங்களை மீண்டும் சிபிஐ வசம் அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, மோசடி நிகழ்ந்தததற்கான முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தால், சிபிஐ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023