கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்தார் மோடி!
இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது பற்றி...
இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ravivarma.s
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் வருகைதந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக கொடிசியா வளாகத்துக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் திரண்டு பாஜகவினரும், மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவ.19) முதல் 3 நாள்கள் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இந்த மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, இயற்கை வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போர், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனா்.
கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!
Modi inaugurates organic farming conference in Coimbatore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது