14 Dec, 2025 Sunday, 12:52 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள்! மோடியின் கவனம் ஈர்த்தது!

PremiumPremium

சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகளைப் பார்த்த பிரதமர் மோடி அவற்றை வாங்கிவருமாறு கூறினார்.

Rocket

சிறுமிகள் வைத்திருந்த பதாகைகள்

Published On19 Nov 2025 , 10:47 AM
Updated On19 Nov 2025 , 11:32 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Vanisri

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வேளாண்மை மாநாட்டில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள் அவரது கவனத்தை ஈர்த்தன.

பிரதமரின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் மாநாட்டில் பள்ளி மாணவிகள் இருவர் பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். இதனை தனது சிறப்புரையின்போது கவனித்த பிரதமர் மோடி மாணவர்களின் கையில் இருந்த பதாகைகளை பெற்று வழங்குமாறு தெரிவித்தது அங்கிருந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

கூட்டத்தினரைப் பார்த்து ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்துக்கு நடுவே, இரண்டு சிறுமிகள் தங்கள் கையில் இரண்டு பதாகைகளை ஏந்தியபடி நின்றிருந்தனர்.

ஒரு பதாகையில், நான் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் போது பட்டதாரி ஆவேன், பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும்போது ஓய்வு பெறுவேன், இதற்காக நன்றி' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பதாகைகளைப் பார்த்த பிரதமர் மோடி, கூட்டத்தில் இரண்டு சிறுமிகள் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். சிறுமிகள் ஏந்தி நின்ற பதாகையில் உள்ள வாசகங்களை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அவற்றை பாதுகாவலர்கள் சிறுமிகளிடமிருந்து பெற்று என்னிடம் கொடுங்கள். பிறகு அந்த சிறுமிகளை நான் சந்தித்துப் பேசுகிறேன் என்று கூறினார்.

மேலும், கண்ணா அதில் என்ன எழுதியிருக்கிறதோ, அதை என் கருத்தில் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள், சிறுமிகளை அழைத்து அவர்களின் விவரங்கள் கேட்டுக் கொண்டு, அவர்கள் கையில் இருந்த பதாகைகளைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.

அப்போது பேசிய மோடி, வெகு நேரமாக கம்பீரமாக இந்த பதாகைகளை ஏந்தியபடி நின்றிருந்தீர்கள். மிகவும் நன்றி என்று கூறினார்.

இந்த மாநாட்டின் தொடக்கத்தில், நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு (பி.எம்.கிஸான்) திட்டத்தின்கீழ் 21-ஆவது தவணையை பிரதமர் விடுவித்தார்.

இன்று காலை, தில்லியிலிருந்து ஆந்திரம் சென்ற பிரதமர் மோடி, புட்டபர்த்தி கோயிலில் தரிசனம் செய்தார். பிறகு நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கார் மூலம் கொடிசியா அரங்குக்கு வந்து, மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Seeing the banners held high by the girls, Prime Minister Modi asked them to buy them.

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023