வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் கலந்தாய்வுக் கூட்டம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஜூன் 28) பனையூரில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
”பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான்; 99 சதவிகிதம் கட்சியினர் நம்மிடம் உள்ளனர். காலையில் இலந்தைப் பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுக்கப்படுகிறது, போடுங்கள் என்றால் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து ராமதாஸின் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார். அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
தினமும் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன், யாராவது பெற்ற மகனையும் மருமகளையும் பொதுவெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா?” என்றார்.
மேலும், அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் 2024-ல் கூட்டணி வைத்தேன்; அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தால், நான் ஏன் மறுக்கப்போகிறேன்.
ராமதாஸ் மீது வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருப்பாரா? இப்போது புகழ்வது ஏன்? செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்?
ஐயா ஐயாவாக(ராமதாஸ்) கடந்த 5 ஆண்டுகளாக இல்லை, 3 பேர் கட்டுப்பாட்டில் உள்ளார்” என்றார்.
Summary
Patali Makkal Katchi leader Anbumani has said that Ramadoss has become like a child due to his advanced age.
இதையும் படிக்க: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகார வரம்பு உயர்வு: தமிழக அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாம்பழத்தில் விஷம் ஏறிவிட்டது! சௌமியா வென்றால் 'அதருமபுரி' ஆகிவிடும்! ராமதாஸ்

செளமியாவுக்கு வாக்களிக்காதீர்கள்! ராமதாஸ் வேண்டுகோள்

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!
பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

