நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அமித்ஷா பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி

News image
அமைச்சர் ரகுபதி- கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2025, 10:04 am

DIN

அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய சித்தன்னவாசல் கோடை விழாவின் இரண்டாம் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார். தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற மாநிலங்களை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவரது நினைப்பு, விருப்பம் என்பது ஒரு சதவீதம்கூட தமிழகத்தில் கிடையாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வருவாய் எவ்வளவு இருந்தது? தற்போது தமிழகத்தின் வருவாய் மத்திய அரசுக்கு எவ்வளவு செல்கிறது? என்பதை தெரிவித்துவிட்டு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

முருகன் மாநாட்டை வைத்து திமுக எந்த விதமான சூழ்ச்சியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாரதிய ஜனதா கட்சிதான் முருகன் மாநாடு நடத்தி குழப்பத்தில் உள்ளது. மத்திய அரசு பெற்று வரும் நிதி அளவுக்கு தமிழகத்துக்கு திருப்பி தருவதில்லை

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக சொல்வது ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.

Minister Raghupathi has said that Amit Shah is sleeping and daydreaming and he is not yet aware of the situation on the ground in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.