தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சென்னை திரும்புபவர்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News image
ரயில்கள்(கோப்புப்படம்)
Updated On :19 ஜனவரி 2025, 5:38 am

DIN

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 8 பெட்டிகளுடன் கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், திண்டிவனம் வழியாக நள்ளிரவு 12.45 மணியளவில் எழும்பூர் வந்தடைகிறது.

மேலும் ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றிரவு 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிவடைந்து சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள், சனிக்கிழமை முதல் சென்னைக்கு திரும்பிவரத் தொடங்கியுள்ளனா்.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, வண்டலூா் - கேளம்பாக்கம் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் ஜன. 20-ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகா், பொத்தேரி, மற்றும் காட்டாங்குளத்தூா் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.