டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வடபழனி முருகன் கோயிலில் இன்று நள்ளிரவு 12 மணி வரை தரிசனம் செய்யலாம்!

வடபழனி முருகன் கோயிலில் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2025, 9:51 am

DIN

வடபழனி முருகன் கோயிலில் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையில் புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் இன்று பகல் 12 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படாது என்றும் இன்று(ஜன. 1) நள்ளிரவு 12 மணி வரை கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று மட்டும் சுமார் 1.50 லட்சத்துக்கும்மேற்பட்டோர் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோயில் நடை பகல் 12 மணிக்கு மூடப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.