டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நிஃப்ட் நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில்(நிஃப்ட்) இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். அந்தவகையில் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தோ்வு பிப். 8-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிச. 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான கால அவகாசம் வரும் ஜன. 6-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று நிஃப்ட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன. 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதக் கட்டணத்துடன் ஜன. 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜன. 18, 19-ஆம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.