எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜன. 3-ல் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு!

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக...

News image
தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர். (கோப்புப்படம்)
Updated On :31 டிசம்பர் 2025, 10:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாா்களிடம் அறிவுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சங்குறிச்சியில் இருந்துதான் தொடங்குகிறது. இதேபோல் தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.