அண்ணாமலை (பாஜக): தமிழகத்தில் கஞ்சா புழக்கம் எங்கும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா். தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடா்பான வழக்குகள் தொடா்ந்து பதிவாகி வருகின்றன. தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை ஆவடி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பலா் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் ஆழமாகப் பரவியுள்ளது என்பதற்கு இந்த கைது மற்றும் பறிமுதல் சம்பவங்களே நேரடி சாட்சி. கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த திமுக அரசு, உண்மையை மறைத்து தப்பிக்க முயற்சிக்கிறது.