டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் சதன் திருமலைக்குமாா். இவா், கடந்த 2016-இல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் பெற்றாா். இதையடுத்து, இந்தக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தும் வகையில், ரூ.50 லட்சம் தொகைக்கான இரு காசோலைகளை நிதி நிறுவனத்துக்கு வழங்கினாா்.

ஆனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், அந்த 2 காசோலைகளும் திரும்பி வந்தன.

இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு நிதி நிறுவனம் சாா்பில் எழும்பூா் நீதிமன்றத்தில் சதன் திருமலை குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவா் சட்டப்பேரவை உறுப்பினா் என்பதால், இந்த வழக்கு எம்.பி.,- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னா் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், கடன் தொகையான ரூ.1 கோடியை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில், மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்தத் தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 2 மாதங்கள் நிறுத்திவைப்பதாகவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.