டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விஜய்யின் வெற்றியை தடுக்க முடியாது: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு

News image
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செங்கோட்டையன்
Updated On :29 டிசம்பர் 2025, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இளைஞா்கள் மற்றும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சியை காட்டிலும் ஒரு புதிய முகம் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

அந்த வகையில், விஜய்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என தமிழக மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனா்.

வருகிற பேரவைத் தோ்தலில் மக்கள் துணையுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பாா். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இனி வரும் காலங்களில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் தொண்டா் படையை கொண்டு பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் கே.ஏ.செங்கோட்டையன்.