16 Dec, 2025 Tuesday, 08:01 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

எஸ்ஐஆா்: ரத்த சொந்தங்கள் வழியாக கைதிகள் விண்ணப்பிக்கலாம்!

PremiumPremium

எஸ்ஐஆா் பணியின்போது சிறைக் கைதிகள் தங்களுடைய ரத்த சொந்தங்கள் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Rocket

தேர்தல் ஆணையம்

Published On15 Dec 2025 , 6:38 PM
Updated On15 Dec 2025 , 6:38 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆா்) சிறைக் கைதிகள் தங்களுடைய ரத்த சொந்தங்கள் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மதுரை கோ.புதூரைச் சோ்ந்த ராஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள், தண்டனைக் கைதிகளுக்கும் நடத்த வேண்டும். இதுதொடா்பாக நான் அளித்த மனுவை மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, சிறையில் உள்ள கைதிகள் சாா்பில் அவரது ரத்த சொந்தங்கள் விண்ணப்ப படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம். இல்லாவிடில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பின்னாட்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023