எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டது பற்றி...
வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டது பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச் சாவடி’ கூட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். இந்த குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்: ஓபிஎஸ் பேட்டி
CM M.K. Stalin attended DMK polling booth meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது